வனாந்திர பாதையா - Vanandhira Padhaiyaa

 வனாந்திர பாதையா - Vanandhira Padhaiyaa


வனாந்திர பாதையா? கலங்கிடாதே!

தண்ணீரை கடக்கும் பாதையா? தயங்கிடாதே

நெருப்பின் மேல் நடக்கும் பாதையா? அஞ்சிடாதே

உன் பாதை அறிந்த கர்த்தரே, 

உன்னோடு என்றும் நடக்கின்றாரே -2 வனாந்திர


1. கடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டங்கள் நிறைந்ததோ? 

இனி நடக்கும் பாதை எதுவென்று அறியாமல் திகைக்கின்றாயோ?

நீ கடந்து வந்த பாதையெல்லாம் கஷ்டங்கள் நிறைந்ததோ? 

இனி நடக்கும் பாதை எதுவென்று அறியாமல் திகைக்கின்றாயோ?


இயேசுவை சார்ந்து வாழ்ந்திடு, 

விடுவித்து சகாயம் செய்திடுவார்

இயேசுவை சார்ந்து வாழ்ந்திடு,  

நீதியின் பாதையில் நடத்திடுவார் -வனாந்திர


2.உன் ஆவல்களும் ஏக்கங்களும் கர்த்தர் நன்கறிவாரே 

அவர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு அமைதியை  அளிப்பாரே

உன் ஆவல்களும் ஏக்கங்களும் கர்த்தர் நன்கறிவாரே 

அவர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு அமைதியை  அளிப்பாரே


திடன்கொண்டு ஜெயத்துடன் எழும்பிடு

அவர்  சித்தம் என்றுமே செய்திடு 

திடன்கொண்டு ஜெயத்துடன் எழும்பிடு

அவர் நாமல் பாரினில் உயர்த்திடு-வனாந்திர..

வனாந்திர பாதையா - Vanandhira Padhaiyaa




Post a Comment (0)
Previous Post Next Post