அன்பே என்றென்னை - ANBAE ENTRENNAI

 அன்பே என்றென்னை - ANBAE ENTRENNAI 


அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே

அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே

நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே

நன்றியுடன் பாடுகின்றேன்-2


நான் தனிமை என்றெண்ணும்போது

தாங்கி கொண்டீரே

தயவால் அணைத்துக்கொண்டீரே

நான் ஆராய்ந்துக் கூடாத நன்மை செய்தீரே

நன்றி சொல்ல வார்த்தை இல்லையே-அன்பே


1.என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்

அதை மிஞ்சும் அன்பை உம்மில் கண்டேனே-2

நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்-2

என்னை நான் தாழ்த்துகின்றேன்-அன்பே


2 நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர்

என்னை விடாத அன்பை உம்மில் கண்டேனே-2

நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய்-2

என்னை நான் தாழ்த்துகின்றேன்-அன்பே





Post a Comment (0)
Previous Post Next Post