கன்மலையே கர்த்தாவே - Kanmalayae Karthavae

 கன்மலையே கர்த்தாவே - Kanmalayae Karthavae


கன்மலையே கர்த்தாவே

நீர் செய்த நன்மைகள் ஆயிரம்

அதை எண்ணியே நன்றி சொல்வேன்

கண்மணி போல் காப்பவரே

அனுதினமும் என்னை நடத்தும்

உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்

வாழ்வின் பாதை இதுவே என்றீர்

கரம் பிடித்தே நடத்தினீர்-2


பலவீன நேரத்திலும்

பரிகாரியானவரே

எல்லா இக்கட்டு நேரத்திலும்

துணையாக நின்றவரே-2

உளையான சேற்றில் நின்று

என்னை தூக்கி எடுத்தவர் நீரே

உந்தன் மாறா அன்புக்கீடாய்

வேறொன்றும் இல்லையே-கன்மலையே


துன்பம் சூழ்ந்த வேளையிலும்

இன்பமாக வந்தவரே

தொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்

உம்மை துதிக்க செய்தவரே-2

ஜீவனுள்ள காலம் உந்தன்

நன்மை கிருபை தொடரும் என்றீர்

எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்

பாடி மகிமைப்படுத்துவேன்-கன்மலையே





Post a Comment (0)
Previous Post Next Post