உம்மை பாடாமல் என்னால் - Ummai Paadamal Ennaal

 உம்மை பாடாமல் என்னால் - Ummai Paadamal Ennaal


உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையா

உம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2


அன்பு தெய்வமே நேச தெய்வமே-2

இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம


எளிமையானவன் சிறுமையானவன்

தண்ணீரை தேடி தாகத்தாலே

நாவறண்டு போனேனே

என்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2

(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2

                     - உம்மை பாடாமல்


1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்

 நீர் பார்ப்பதே இல்லை

பட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லை

யாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லை

புழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே

பெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2


உம் அன்பிற்கு ஈடு இணை இல்லையப்பா

உம் இரக்கத்தற்கு முடிவேதான் இல்லையப்பா-2

                     - உம்மை பாடாமல்


2.ஏழைகளின் பெலனெல்லாம் நீர்தானையா

எளியவனுக்கு திடன் எல்லாம் நீர்தானையா

சிறுமைப்பட்டவனின் நம்பிக்கையெல்லாம் நீர்தானையா

திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன் நீரே

உம்மை நம்புகிற யாவரையும் நீர் கைவிடவேமாட்டீர்-2


ஒரு தாயை போல தேற்றுகின்ற தெய்வம் நீரே

தகப்பனை போல சுமக்கின்ற தெய்வம் நீரே-2

                     - உம்மை பாடாமல்

உம்மை பாடாமல் என்னால் - Ummai Paadamal Ennaal




Post a Comment (0)
Previous Post Next Post