என் இயேசுவின் சந்நிதியில் - En Yesuvin Sannidhiyil

 என் இயேசுவின் சந்நிதியில்  - En Yesuvin Sannidhiyil 


என் இயேசுவின் சந்நிதியில் 

என்றும் கீதங்கள் பாடிடுவேன்

என்னைக் காத்திடுமே அவர் நாமமதே 

துதி கீதங்கள் பாடிடுவேன்.


 சரணங்கள்


1. கண்ணீர் அவர்  துடைத்திடுவார்

கருணைக்கரம் தாங்கிடுவார்

எந்தன் கல்வாரி நாயகன்  இயேசுவாலே

எல்லாப் பாவங்கள்  அகன்றிடுமே. - என்


2.பரமன் குரல் கேட்கும்போது 

பரமானந்தம் அடைந்திடுவேன்

எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே

அதி சீக்கிரம் கிடைத்திடுமே.  - என்


3. மோட்ச பாக்கியத்தை  நினைத்திடவே 

பொங்குதே யுள்ளம் சந்தோஷத்தால் 

வேகம் வந்திடுவார் எந்தன்  ஆத்ம நேசர்

என்னைத் தம்முடன்  சேர்த்திடவே. - என்


4. பாரில் பரிசுத்த ஜீவியத்தை 

தேவ பயத்துடன் காத்துக் கொள்வேன் 

எந்தன் ஆவியும் ஆத்ம  சரீரம் முற்றும்

என்றும் கர்த்தருக்கொப்பு  விப்பேன்.  - என்


5. தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க 

கர்த்தர் இயேசு தம்  மகிமையுடன்

வானில் வெளிப்படுவார்  சீயோன் இராஜனவர் 

என்னை சீயோனில் சேர்த்திடுவார்.  - என்



Post a Comment (0)
Previous Post Next Post