Paran Yesaiya Lyrics - பரன் இயேசையா Tamil Christian song lyrics with English transliteration and meaning. Lyrics, tune & composition by Rev. John Jebaraj.
பரன் இயேசையா
எங்கள் அரண் இயேசையா -2
கொடுங்காற்றில் கலையாமல்
நீர் காத்த இந்தக் கூடு உமதன்பின்
பசையாலே கீழ் பூசிய இந்த வீடு
மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும்
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா எங்கள் அரண் இயேசையா -2
1.மறுநாளை சந்திக்க பலனின்றி உறங்கின
ராத்திரிகள் வந்து போனதையா
எதற்காக வாழ்கிறோம் என்றெண்ணி கலங்கி
படுக்கையைக் கண்ணீரால் நனைத்தோமையா -2
ராக்காலத்தின் கேள்வியின் மேல்-2
சூரியனாய் உதித்தீரையா - நன்றி ஐயா
2. உணவும் உடையும் இருக்கின்ற இடமும்
உம் கரம் எங்களுக்குத் தந்ததைய்யா
ஏங்கின பொருளும் உயர்வும் வசதியும்
எளிதாக எங்களுக்குத் தந்தீரையா -2
காட்சியாக வாழ்ந்தோமைய்யா-2
சாட்சியாய் உள்ளோமைய்யா
இப்போ சாட்சியாய் உள்ளோமைய்யா